Tuesday, January 27, 2026

எழுபத்திரண்டிற்கு...

 பிறந்தநாள் [ஜனவரி இருபத்தியெட்டு - திருமுழுக்கு பதிவேட்டின் படி, மற்றும் மே பத்து - பள்ளி பதிவேடு] கொண்டாட்டம் என்பதே தெரியாது, 'அருட்'பணி பயிற்சிக்கு வரும்வரை... பங்கு பணிக்கு வந்தபிறகு அது தெரிந்தவர்கள் வாழ்த்த முன் வந்தபோதெல்லாம் மறுத்திருக்கிறேன், தப்பித்துமிருக்கிறேன்...  கொஞ்சம் காலமாக வெளியே எங்கேனும் போயி தனித்து அந்த நாளை செலவழிப்பது சாதாரணமாகிவிட்டது... இன்று  பேராயர் (ஓய்வு) சூசை பாக்கியம் அவர்களின் தம்பி, ஆல்பர்ட் இறந்து நல்லடக்கம் செய்யப்படவிருப்பதால், அவர்  மறைமுகமாக விரும்பியபடி அதில் கலந்துகொள்ள பங்கிலேயே இருந்துவிட்டேன், காலை திருப்பலிக்குப்பிறகு... 

திடுப்பலி தொடக்க உரையில் இன்றைய முதல் வாசகம் இரண்டு சாமுவல் ஆகமம் பகுதியில் ஆலயத்தில் வாழ விரும்பும் கடவுளை வாசிக்க மனதில் அக்பர் பிச்சைக்கு வந்த துறவி கதை சொன்னேன்... அத்தோடு கோயிலில் வெளிவேடம் விரும்புவோரை கண்டித்தும் பேசினேன்... 

திருப்பலிக்கு பிறகு ஷைன் (விங்க்ஸ்டன்)  வந்து என்னை வாழ்த்தி ஆச்சர்யப்படுத்திவிட்டான்....

Wednesday, January 14, 2026

'உன் சந்நிதியில்', குமரி ஆதவன் அவர்களது உரை...

 பங்கிராஸ் அருளப்பன் அவர்கள் எழுதிய உன் சந்நிதியில் கவிதை நூல் குறித்து எழுத்தாளர் குமரி ஆதவன் அவர்களது உரை

https://youtu.be/C8aCoX117Kk?si=dekrvuALEMPxblvT


21.12.2025 at Thentral, Shanthipuram...

 21.12.2025 at Thentral, Shanthipuram...



Thursday, October 9, 2025

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து பெரியார்...

 கேள்வி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன..?


பெரியார்:


பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை,

ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள். 

இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. 


இந்தத் திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள் தான்.‌ அது தமிழ்தான்!


கேள்வி: 

அப்படியானால் தமிழில் இருந்து தானே மீதி மூன்று மொழிகளும் பிறந்திருக்க வேண்டும்?


பெரியார்: 

நான்கு பெயர்களில்  வழங்கப்பட்டாலும் 

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் நான்கு இடங்களிலும் பேசப்படுவது 

தமிழ் ஒன்று தான். 


நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. 

ஒன்று தான் நான்காக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது.


கேள்வி:  

மொழி அறிஞர்கள் கூடவா இப்படி அறியாமையில் இருந்திருப்பார்கள்?


பெரியார்: 

போக்குவரத்து  வசதி இல்லாத, 

ஒருவருக்கொருவர்  தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் 

அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப 

தமிழ் உச்சரிப்பில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. 


நம்மை நாலு ஜாதியாக பிரித்து வைத்த ஆரியம், 

நம் மொழியையும் நான்காகப் பிரித்து வடமொழியை புகுத்தி, திராவிட மொழியையே கெடுத்துவிட்டது. 


அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு 

அடிமைப்பட்டு இருந்ததால் அதைத் தடுக்கவில்லை. 


இன்று வரையும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்தபாடில்லை.


கேள்வி: 

வடமொழியால் கெட்டதாகச் சொல்கிறீர்களே... 

அந்த திராவிட மொழி எது?


பெரியார்: 

திராவிடமொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது.


கேள்வி: உங்கள் கருத்தை‌ மற்ற மூன்று மொழிக்காரர்களும் ஏற்பார்களா?


பெரியார்: ஆரிய மோகம் அற்ற ஒரு 

தெலுங்கு பண்டிதர்,

ஒரு கன்னடிய பண்டிதர், ஒரு மலையாள பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து 

நாலு மொழி அகராதிகளையும் வைத்துக் கொண்டு, அவற்றில் உள்ள வடமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 

எஞ்சி இருப்பது தமிழ் வார்த்தைகள்தான் என்பதையும் 

100 க்கு 5 வார்த்தை கூட தமிழ் அல்லாத வார்த்தைகள் இருக்காது என்பதையும் உணர்வார்கள்.


கேள்வி:

 மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழ்தான் என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?


பெரியார்:


 தமிழில் 'வீடு' என்பதை 

தெலுங்கர் 'இல்' என்றும்,

கன்னடர்'மனை' என்றும், 

மலையாளி 'பொறை' என்றும் கூறுவார்கள். 


தமிழில் 'தண்ணீர்' என்பதை தெலுங்கர் 'நீளு' என்றும், கன்னடர் 'நீரூ' என்றும், மலையாளி 'வெள்ளம்' என்றும் கூறுவார்கள்.


நாம் 'எனக்கு' என்று கூறுவதை 

தெலுங்கர் 'நாக்கு' என்றும், 

கன்னடியர் 'நெனக்கி' என்றும், 

நாம் 'பசு' என்பதை தெலுங்கர் 'ஆவு' என்றும், 

கன்னடர் 'அசு' என்றும், 

மலையாளி ''ஆவ்' என்றும் 

கூறுவார்கள். 


நாம் 'அங்கே' என்பதை ஒருவன் 'அவடே' என்றும், ஒருவன் 'அக்கடே' என்றும் கூறுவர்.


நேக்கு,  நோக்கு, அவாள், இவாள் என்று பேசுவதெல்லாம் தமிழ் என்று கூறும் போது 

நாக்கு, நெனக்கி, எனக்கி, இல், மனை, பொறை, நீளு, வெள்ளம் என்று கூறும் மக்களைத் தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்க வேண்டும்? 


ஆகவே தான் நான் கூறுகிறேன். 

இவை நான்கும் நான்கு இடத்தில் நான்கு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கு அல்ல. 


ஆரியம் தான் இவற்றை நான்காக பிரித்து வைத்துள்ளது. 

இந்த  ஆரியத்திற்குக் கையாளாக இருப்பவர்கள்தான் தம் அறியாமையால் இப்பிரிவினைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய 

உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். 


சுயநலம் மறந்து, உண்மை மொழிப்பற்று கொண்டு ஆரிய வட சொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும்.


கேள்வி: ஆக நான்கு மொழிகளும் தமிழ்தானா?


பெரியார்:

இவை நான்கும் ஒரு உதிரத்தில் இருந்து உதித்து எழுந்தது அல்ல 

அந்த உதிரமேதான் இவை நான்கும் 


என்னருந் தமிழே! 

நீயேதான் தெலுங்கு, 

நீயேதான் மலையாளம், 

நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். 


இவை வெவ்வேறு மொழிகளாய் இருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? 


தமிழுக்குத் தான் முதல் நூல்கள் எத்தனை உள்ளன? 


அத்தனையும் ஆடிப்பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும், 

அவர்களின் அடிவருடிகளும் தானே 

இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்?


கேள்வி: உங்கள் கருத்தால் தமிழுக்குக் கேடு வராதா?


பெரியார்: 

உண்மையாகத் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 

பாடுபடுபவர்கள் திராவிடர் 

கழகத்தார்கள் தான். 


நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது 

மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! 


எங்கள் முயற்சியால் எதுபோகும்? 


உங்கள் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய உண்மையில் தமிழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகு அளவேனும் கேடு வருமா?


(10.01.1948 - 'குடிஅரசு' இதழில் பெரியார் எழுதிய 'மொழி ஆராய்ச்சி' கட்டுரையின் ஒரு பகுதி)

நிறைவேறாத ஆசை... ‘நக்சலைட்’ ஆக வேண்டும்... [சில்க் ஸ்மிதா]

 https://www.facebook.com/share/p/1AJMXpJmSE/



‘‘ஒரே கேள்வி...’’ என்றார் ஆந்திர பிரபா எனும் ஊடகத்தின் நிருபர்.


‘‘கேளுங்கள்’’ என்றார் சுமிதா.


நிருபர் : இப்போது தமிழ், தெலுங்கு, படங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். கதாநாயகர்கள் கூட உங்களுக்காகக் காத்திருக்கும் அளவுக்கு நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். நினைத்ததை எல்லாம் நீங்கள் பெறமுடியும். இப்போதும் கூட உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா?


சுமிதா : ஆசைப்படாதவர் யார்? ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்தவர் யார்? எனக்கும் ஒரு ஆசை இருந்தது. ஒரே ஓர் ஆசைதான். நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சினைகளின் அலைகள் மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!


நிருபர் : புகழின் வெளிச்சத்தில் நடக்கும் எந்த அழகியும் இப்படி ஆசைப்பட மாட்டார். விநோதமாய் இருக்கிறது.

நக்சலைட் ஆக வேண்டுமென்றா ஆசைப்பட்டீர்கள்..?


(ஒரு கவர்ச்சி நடிகையிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று நிருபர் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை)


சுமிதா : ஆம். உங்களுக்குச் சந்தேகமா?


நிருபர் : நக்சலைட் என்றால் என்ன? யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? மேடம்... 

நக்சலைட் என்றால் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி...


சுமிதா : (ஒரு பெருமூச்சு விட்டவாரே தொடர்கிறார்...) ‘‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’’


(நிருபர் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார்) 


சுமிதா : இங்கே ஒரு வேடிக்கையான முரண்பாடு துருத்திக்கொண்டிருக்கிறது. பலவீனமானவர்கள்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்.

சர்வாதிகாரிகள் தான் அப்பாவிகளைக் கூட ஆயுதம் தூக்க வைக்கிறார்கள்...


நிருபர் : (தனது குறிப்பேட்டை மூடிவிட்டு...) நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எழுதலாமா?


சுமிதா : உங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் உங்களை அனுமதிக்கும் வரை எழுதலாம்.!