Sunday, April 20, 2008

இனியவளே இரயுமன்துறை தாயே....

இனியவளே இரயுமன்துறைத் தாயே
இயற்கையின் இளமை நிறைந்தவளே
இருப்போர்க்கின்பம் அளிப்பவளே
இறந்தோர் உன்னை இழந்தனரே.

தாமிரபரணி உந்தன் தாழ் தழுவ
அரபிக்கடல் உந்தன் தலை வருட
கடற்காற்றென்றும் அரவணைக்க
கண்ணை பறிப்பது உன்னழகே.

இளம் காளையர் இளம் மீனவர்
கயல்விழி மாதர் கவின்மிகு மங்கையர்
கதிரவன் ஒளியினில் கடற்கரைக் காதலர்
கலந்துறவாடுவர் களிப்புறுவர்.







No comments: