Friday, October 9, 2020

தோழர்.சேகுவாரா...

 தோழர்.சேகுவாராவின் மறக்கடிக்கப்பட


கடைசி அத்தியாயம்.


××××××××××××××××××××××××××××××××


10- 10- 17 இன்று ஒரு தமிழ் நாளிதழில்


வெளிவந்த தோ.சேகுவாராவை பற்றியான ஒரு கட்டுரையில் பொளிவியாவிலுள்ள லாஹிகுவாராவில் ஏகாதிபத்திய  ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழரில் உடல்  ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டது.அந்த ஹெலிகாப்டரில் உடன் வந்த  சிஐஏ உளவாளி கஸ்டோட


வில்லோடாவை சற்று நினைவில் வைய்யுங்கள்.ராணுவ ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்ட தோழரின் உடல் எங்கு எரியூட்டப்பட்டது என்றோ எங்கு புதைக்கப்பட்டது என்றோ 50 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் மர்மமாகவே உள்ளது என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவத்திர்க்கு பின் நடந்த சம்பவங்கள் அவர் அறியாததாலோ அல்லது அதை தெளிவற்றதாக மறைப்பதர்க்காகவோ கட்டுரையாளர் அவ்விதம் குறிப்பிட்டிருக்கவேண்டும்.1967-ஆம் ஆண்டு தோழரின் மறைவுக்கு பின் 30ஆண்டுகளாக தோழரின் இறுதி சடங்குகள் சம்மந்தமாக க்யூபாவிலும் பொளிவியாவிலும்  எண்ணற்ற ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இந்த கால அளவில் பொளிவியாவிலும் அரசியல் மாறுதல்கள் நிகழ்ந்து ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்திருந்ததது.இந்த சூழலில் இறுதியாக ராணுவ ஹெலிகாப்டரில் தோழரின் பூத உடலை ஏற்றிச்சென்ற முதலில் குறிப்பிட்ட சிஐஏ  உளவாளி கஸ்ட்டோடா வில்லோடா உண்மையை ஒத்துக்கொண்டான்.பொளிவியாவிலுள்ள வாலே கிராண்டா விமான ஓடுபாதைக்கு அருகில் புதைக்ப்பட்டதை அடையாளம் காட்டமுடியுமென்று அவன் உறுதியளித்தான்.


     சில எலும்பு கூடுகள் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.கைகளின்றி இருந்த அந்த உடல் கருப்பு பெல்ட் அணிந்திருந்ந அந்த உடலே சேகுவாரா என அடையாளம் காணப்பட்டது. சே படுகொலை செய்யப்பட்டபின் அவரது இரு கைகளும் வெறிபிடித்த ஏகாதிபத்திய நாய்களால் வெட்டி எடுக்கப்பட்டதை அந்த சிஐஏ  உளவாளி முன்பே சாட்சியம் அளித்திருந்தான். அங்கிருந்து 20 கிமி தொலைவிலுள்ள சாந்தா குரூஸ்  மருத்துவமனையில் அந்த எலும்பு கூடுகள் ஒரு உலோக தகிட்டில் வைக்கப்பட்டன.கிழிந்து நைந்துபோன ஆடை, சூ எல்லாம் வைக்கப்பட்டன. அவரை புதைக்குமுன் எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.


       சேவின் உடலை அதுவும் புதைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குபின் தோண்டி எடுக்கப்பட்ட உடலை காணவும் வீர அஞ்சலி செலுத்தவும் தென்னமேரிக்க கண்டத்தின் மக்கள் திரள்  அங்கு திரண்டது.சேகுவாரா யுகங்கள் தோறும் உயர்த்தெழும் அணையா கங்கு என உலகுக்கு பறைசாற்றியது..சே கொல்லப்பட்டபோது எதிர்மறையாய் செய்தகள் வெளியிட்ட ஊடகங்களும் இப்போது வீரகாவியமாய் சித்தரித்து எழுதின.


1997-ல் பெடல் காஸ்ட்ரோ சேவின் உடலை பெற்றுக்கொண்டார்.சேவின் உடலை வரவேற்று க்யூபாவில் திரண்ட மக்கள் கூட்டம்,சே க்யூபா மக்களின் நெஞ்சங்களில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பதை பறைசாற்றியது.


க்யூபாவில் ஸாண்டா கிளாரா நகரில் கட்டப்பட்ட நினைவகத்தில் சேவின் உடல் பல லட்சம் மக்களின் பங்களிப்புடன் சகலவவிதமான மரியாதைகளுடனும் 1997-ஆம் ஆண்டு 


அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி புதைக்கப்பட்டது


அப்போது காஸ்ட்ரோ ஆற்றிய உரை உணர்ச்சி பிழம்பாய் தகித்தது.


" மீண்டும் ஒருபோதும் நிகழமுடியாத உணர்ச்சிமயமான அற்புத கணங்களில் நாம் ஆழ்ந்த ஈடுபாடுடன் கரைந்து நிர்க்கிறோம். சேவுக்கும் வீரம் செறிந்த தோழர்களுக்கும் விடை கொடுக்க நாம் இங்கு கூடவில்லை, சேவை வரவேற்கவே கூடியுள்ளோம்.


நான் சேவையும்  அவரது சக கொரில்லாக்களையும் வலிமைமிக்க படையாக...போராளிகளின் படையாக காண்கிறேன்.


ஒரு நினைவு தூணில் அடங்கக்கூடியவரா அவர்?


இந்த சதுக்கத்துக்குள் ஒடுங்குபவரா அவர்?


என் அன்புக்குரிய--- ஆனால் இந்த சின்னஞ்சிறு தீவில் முடங்குபவரா அவர்?


அவர் எதர்க்காக கனவு கண்டாரோ- வாழ்ந்தாரோ- போராடினாரோ அந்த உலகில் அவருக்கென நினந்தர இடம் என்றென்றைக்கும் உண்டு.


மனித சமூகம் எந்த அளவுக்கு அதிகம் சுரண்டப்படுகிறதோ,எந்த அளவுக்கு அசமத்துவவும் வேலையின்மையும்


பஞ்சமும் பட்டணியும் துன்ப துயரங்களும் உள்ளனவோ அந்த அளவுக்கு சேவின் ரூபம் விஸ்வரூபம் எடுக்கும்.


சே முன்னெப்போதையும் விட மேலுமதிக போர்க்களங்களில்


நிற்கிறார்!வெல்கிறார்.உங்கள் முன்னுதாகரணத்துக்கு நன்றி அன்பு தோழரே ".


ழீழ்பதிவு.

Thursday, October 8, 2020

Reflection on Mass Readings...

 ജോബിന്റെ പുസ്തകത്തിലെ അവസാന ഭാഗമാണ് ഇന്ന് നാം ശ്രവിച്ചത്. 


നീതിമാന്റെ സഹനമെന്ന  സങ്കീർണമായ പ്രശ്നം അപഗ്രഥിച്ചു പരിഹാരം കാണാനുള്ള ശ്രമമായിരുന്നല്ലോ പുസ്തകത്തിന്റെ പ്രമേയം.


ജീവാപഹരണം ഒഴിച്ചുള്ള സകല ദുരിതങ്ങളും സഹിച്ച ജോബിനെ അദ്ദേഹത്തിന്റെ ഭാര്യയും ആത്മസുഹൃത്തുക്കളും പോലും ദൈവത്തെ പഴിക്കാൻ അദ്ദേഹത്തെ പ്രേരിപ്പിക്കുമ്പോഴും ജോബ് സംശയിക്കുന്നതല്ലാതെ കീഴടങ്ങുന്നില്ല എന്നു മാത്രമല്ല, ദൈവം പ്രത്യക്ഷപ്പെട്ടു കാര്യങ്ങൾ വ്യക്തമാക്കിക്കൊടുത്തപ്പോൾ, തനിക്ക് മനസ്സിലാകാത്ത... കാര്യങ്ങളെക്കുറിച്ച്... പറഞ്ഞുപോയി എന്ന് പരിഭവിക്കുന്ന ജോബിന്റെ ജീവിതം മുന്പിലത്തേ തിനേക്കാൾ ധന്യമാക്കി എന്ന ശുഭ പര്യവസായിയായി. 


ദൈവപുത്രനായ യേശുവിന്റെ പീഡകളും മരണവും ഉയിർപ്പും ഇതേ സന്ദേശംതന്നെയല്ലേ നൽകുന്നത്, നിലത്തുവീണ് ഇല്ലാതായി തീരുന്ന ഗോതമ്പു മണിപോലെ..!


ഒന്നിലും, മടിശ്ശീലയിലോ, സഞ്ചിയിലോ, ചെരുപ്പിലോ  പോലുമോ ആശ്രയിക്കാതെ, ചെയ്യുന്ന വേലയ്ക്ക് അർഹമായ കൂലിയിൽ മാത്രം ആശ്രയിക്കാൻ ആഹ്വാനം ചെയ്ത്, താൻ പോകാനിരുന്ന പട്ടണങ്ങളിലേക്കും നാട്ടിൻ പുറങ്ങളിലേക്കും തനിക്കു മുമ്പേ ശിഷ്യന്മാരെ അയച്ച യേശു സന്തോഷത്തോടെ തിരിച്ചുവന്ന അവരെ ഓർത്ത്, ആത്മാവിൽ ആനന്ദിക്കുന്നു, ശിശു തുല്യരായ, നിസ്സാരരായ ശിഷ്യൻമാർക്ക് തിന്മയുടെ ശക്തികൾ കീഴടങ്ങുന്ന രഹസ്യം വെളിപ്പെട്ടതിനെയോർത്ത് ദൈവത്തെ സ്തുതിക്കുന്നു, ശിഷ്യന്മാരുടെ അത്തരം കണ്ണുകളും കാതുകളും ഭാഗ്യമുള്ളവയെന്ന് പ്രഘോഷിക്കുന്നു. 


യേശുവിന്റെ വിളി ശിഷ്യത്വത്തിലേക്കുള്ളതാണ്. ശിഷ്യൻ എല്ലാം ഉപേക്ഷിച്ചു സ്വന്തം കുരിശുമെടുത്ത് അവിടുത്തെ അനുഗമിക്കേണ്ടവനാണ്. അവർക്കുള്ള പ്രതിഫലം ജോബിന്റെ ധന്യതപോലെ, യേശുവിന്റെ ഉയിർപ്പുപോലെ പ്രാഭവമേറിയതാണ്, ആനന്ദ ദായകമാണ്, സ്തുതിക്ക്‌ യോഗ്യമാണ്.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்...

 பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !

29 வயதில் 17 வேலைகள் பார்த்து கவிஞரானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! - நினைவுதின சிறப்புப் பகிர்வு 


'வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே!' - 


திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாள்  இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம்  என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 


வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.


பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.


தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.         


உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:  


பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு 

பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!    

(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)


எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்: 


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி

தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்

திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார். 


ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம். 


தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.


எம்.எஸ்.விஸ்வநாதனை தூங்கவிடாமல் செய்த பட்டுக்கோட்டையாரின் வரிகள் இவைதான்!


சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரமற்ற அற்புதன்,  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..


அவர் இல்லாமல் தமிழ் பாடல்களே இல்லை.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா.”

“காடு வௌஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”

“வசதி படைச்சவன் தரமாட்டான்

வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"

என்று எழுதப்படிக்கத் தெரியாத தமிழ்நாட்டின் கடைகோடி தமிழனுக்கும்  பொதுவுடைமை  போதித்த பட்டுக்கோட்டை  படித்ததோ இரண்டாம்வகுப்பு. வறுமையின் காரணமாக விவசாயம் பார்த்திருக்கிறார், மாடுமேய்த்திருக்கிறார், மீன் விற்றிருக்கிறார் இப்படி அவர் செய்யாத தொழில்கள் இல்லை. கல்யாணசுந்தரத்தின் அப்பா பொதுவுடமை சிந்தனை கொண்டவர். பொதுவுடமை சிந்தனை நிறைந்த குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்ததால் அவரால் தொழிலாளர்களின் வலியை, கோபத்தை, நியாயத்தை, மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிந்தது. ஆயிரமாயிரம் காலத்துக்கும் தேவையான சிந்தனைகளை  சினிமா பாடல்களின் மெட்டுக்குள் அடக்கிய அவரின் திறன் இன்றுவரை யாருக்கும் கை வரவில்லை  என்று அடித்துச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் ஏழைகளின் நாயகன் ஆனதற்கும் தமிழகத்தின் முதலமைச்சரானதற்கும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் மிகப்பெரிய காரணம். என்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார்.

சினிமாவுக்குள் நுழைவது இன்றுபோல் அன்று எளிதானது அல்ல. பட்டுக்கோட்டை சினிமா ஆசையில் சென்னை வந்து நாடகத்துக்குத்தான் முதன்முதலில் பாட்டெழுதினார். நாடகத்திலேயே அவர் பொதுவுடமை வேட்கை ஆரம்பமாகிவிட்டது.

“தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனால்,

மக்கள் வயிறு காயுது...”

என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகுதான் பாண்டிச்சேரியில் இருந்த பாரதிதாசனிடம் சிஷ்யனாகும் வாய்ப்பு பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்தது. எழுத்தில் ஆற்றல் பெற்றிருந்தாலும் பாரதிதாசனிடம் நேரடியாக தன் கவிதைகளை காட்ட பட்டுக்கோட்டையாருக்கு பயம். `அகல்யா' என்றபெயரில் எழுதிகாட்டியிருக்கிறார். கவிதைகளை படித்து பாரதிதாசன் பாராட்டிய பிறகே, அது தன் கவிதைகள் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுதான்  பாரதிதாசன்மேல் பட்டுக்கோட்டையார் கொண்டிருந்த பிரமிப்புக்கான அடையாளம்.


பட்டுக்கோட்டை சினிமாவுக்கு வந்த நேரத்தில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படப்பாடல்களில் கோலோச்சிக்கொண்டிருந்தனர்.  அந்த மலைகளுக்கு இடையில் மடுவாக நுழைந்த பட்டுக்கோட்டை, அடுத்த சில ஆண்டுகளில் அத்தனை ஜாம்பவான்களும் தன் நடையைப் பின்தொடரும் அளவுக்கு கூர்மையான வார்த்தைகளைக் கொண்டு பாடல் செய்தார். முதலாளிகளையும் அடிமைத் தனத்தையும் வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்.

சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது பல இடங்களில் பட்டுக்கோட்டையை பார்க்காமலேயே விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தால் கோபத்துக்குள்ளான பட்டுக்கோட்டை அந்த நிமிடத்தில் எழுதிய வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை பலநாட்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த சமயத்தில் அவரிடம் பாட்டெழுத வாய்ப்பு கேட்டு  சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை.  `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒருத்தர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்' என்று மேனேஜர் மூலம் எம்.எஸ்.விக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது, “நமக்கு நாள்கள் குறைவாகத்தான் இருக்கிறது. புது ஆட்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுதச்சொல்லுங்க" என்று கோபமாக சொல்லி மேனேஜரை துரத்திவிட்டிருக்கிறார். அதே வேகத்தில் வந்து, "புது ஆட்களைப்பார்க்கும் எண்ணம் இப்போது இல்லையாம்"  என்று எம்.எஸ்.வி மேனேஜர் பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல...

“என்னைப்பார்க்க வேண்டாம். என் கவிதையை படிக்கச் சொல்லுங்கள்” என்று தன்னுடைய கவிதையை கொடுத்திருக்கிறார். மேனேஜரும் `இவன் புது டைப்பா இருப்பான் போலிருக்கே' என்று யோசித்துக்கொண்டு. எம்.எஸ்.வியிடம் போயிருக்கிறார். "அய்யா... நீங்கள் கவிஞனை பார்க்க வேணாடாமாம்.  அவரது கவிதையை படித்தால் போதுமாம்" என்று மேனேஜர் நீட்டிய தாளில்,

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை படித்த எம்.எஸ்.வி நெகிழ்ந்து போயிருக்கிறார்.   அந்த சம்பவத்தைப் பற்றி பின்னாட்களில், “அன்றைய தினம் சாப்பிடக்கூட முடியவில்லை. பூஜை அறையிலேயே கிடந்தேன்.  விஸ்வநாதா... அதற்குள் என்னடா   அகந்தை.? நீ.. என்ன அவ்வளோ பெரிய ஆளா" என்று எனக்குள் நானே வருந்தினேன். எவ்வளவு பெரிய திறைமைசாலியை நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்று அன்று முழுக்க  கடவுளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டே இருந்தேன் ” என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு,  பட்டுக்கோட்டை எழுதிய ஒவ்வொரு பாட்டும்   இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்கான பாடம்.

“முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் இன்பம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் ”

பட்டுக்கோட்டையின் இந்த வரிகளை வியந்து, `அடேயப்பா.. நான் மேடையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... சட்டசபையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... பள்ளியில் பொதுவுடமை கேட்டிருக்கிறேன்...  பள்ளியறையில் பொதுவுடமை சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்'  என்று  ஒரு மேடையில் வைரமுத்து சிலாகித்தது நினைவுக்கு வருகிறது. ஆம், அவர் காதலில்கூட பொதுவுடை சிந்தனை நிறைந்திருந்தது என்பதன் வெளிப்பாடு அது.  அன்றைக்கு தனது ஒவ்வொரு பாடல்களிலும்  சமூக அவலத்தை எதிர்த்து எழுதிய பட்டுக்கோட்டையும்   பாடல் ஆசிரியர்தான். இன்றைக்கு மலிந்துகிடக்கும்  அவலங்களை  ஆராதித்து எழுதுகிறவர்களும் பாடல் ஆசிரியர்கள்தான் என்றால் சிரிப்புதான் வருகிறது.  

பட்டுக்கோட்டை அதற்கும் ஒரு பாடல் வைத்திருக்கிறார். 

"சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"


''காடுவௌஞ்சென்ன மச்சான்

நமக்குக் கையும்காலும்தானே மிச்சம்''

என்று கவலைகொண்டதோடு...

''நம்ம நாட்டுக்குப் பொருத்தம் 

நாமே நடத்தும் 

கூட்டுப்பண்ணை விவசாயம்''


என்று விவசாய முறைகளில் நாம் எதைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டி,

''தைபொறந்தா வழிபொறக்கும் தங்கமே தங்கம்''

என்று நம்பிக்கையும் விதைத்திருக்கின்றன இவரின் பாடல்கள்.

இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டதுமே பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள்தாம் பொதுவாக நினைவுக்கு வருவார்கள். ஆனால், அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு எப்போதுமே முன்னே நிற்கும் புரட்சிக் கவிஞன்... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அக்டோபர் 8, அந்தப் புரட்சிக்காரருக்கு நினைவுநாள். ஆம், அற்புதமான, ஆழ்ந்த கருத்துகளுக்குச் சொந்தக்கவி அவர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் பிறந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலமும் கவிபாடும் திறன்பெற்றவர். அண்ணன் கணபதியோடு உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த கல்யாணசுந்தரம், இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை. அண்ணனிடமே அடிப்படைக் கல்விகளைக் கற்றுக்கொண்டார். 

வளர்ந்த பிறகு, திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும், விவசாயச் சங்கங்களிலும் ஈடுபாடுகொண்ட கல்யாணசுந்தரம், தமிழ்மீது கொண்ட காதலால் பாண்டிச்சேரிக்குச் சென்று பாரதிதாசனிடம் தமிழ்ப் பயின்றார். பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலும் சிலகாலம் பணிபுரிந்தார். இளம்வயதில் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நடிகர் டி.எஸ்.துரைராஜ் உதவியால் சக்தி நாடக சபாவில் இணைந்தார். அப்படியே திரையுலகிலும் கால்வைத்தார். ஆறடி உயரம் கொண்ட ஆஜானபாகுவான கல்யாணசுந்தரம், 1951ல் ‘ராஜகுரு’ கதாபாத்திரத்தில் ‘கவியின் கனவு’ எனும் தமிழ் நாடகத்தில் நடித்தார்.

1953-ல் சக்தி நாடக சபா மூடப்பட்டதால் ‘சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து நடித்தவர், நாடகங்களுக்குப் பாடல்களும் எழுதினார். சினிமா பாடலாசிரியராக அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக உழைத்தார். வாழ்க்கையில் தான் படித்த கடினமான பாடங்களையும் தான்பெற்ற பற்பல அனுபவங்களையும்தாம் அதிகமாகத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், இவரின் நெருங்கிய நண்பர். 1954-ம் ஆண்டில் ஜீவானந்தம் உதவியால் கம்யூனிஸ்ட் பத்திரிகையான ‘ஜனசக்தியில் தன்னுடைய கவிதைகளை வெளியிட்டார் கல்யாணசுந்தரம்.

1954-ம் ஆண்டுக்குப்பின் முழுநேர பாடலாசிரியராக சினிமாவில் தன் பணியைத் தொடர்ந்தார். முதல் பாடலை ‘படித்த பெண்’ என்னும் தமிழ்ப் படத்துக்காக எழுதினார். இத்திரைப்படம் 1956-ல் வெளியானது. அதேஆண்டில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘பாசவலை’ திரைப்படம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பிரபலப்படுத்தியது. பல வெற்றிப் பாடல்களை சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்காக எழுதினார். இவர் எழுதிய பாடல்கள் பலவும்தாம், எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமாக அமைந்தன. கிட்டத்தட்ட 189 படங்களுக்குப் பாட்டு எழுதியிருக்கிறார் கல்யாணசுந்தரம். இவரின் பாடல்கள் தற்போது நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

கல்யாணசுந்தரத்தின் மனைவி பெயர் கௌரவாம்பாள். 1959-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டில்தான் (08.10.1959) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென மரணமடைந்தார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன், பிரமிப்புடன், பொறாமையுடன், நம்பிக்கையுடன்... பலராலும் பார்க்கப்பட்ட கல்யாணசுந்தரம், தன்னுடைய 29 வயதிலேயே மறைந்தது, பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய 29 ஆண்டுகால வாழ்க்கையில் விவசாயி, மாடுமேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு, கடைசியில் கவிஞராக உருவெடுத்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கல்யாணசுந்தரம்.

அவரின் பாடல்களில் இருக்கும் வரிகள் வெறுமனே காசுக்காகப் படைக்கப்பட்டவையல்ல. ஒவ்வொன்றும் அவருடைய இயல்பான வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவைதாம். இதற்கு உதாரணமாகப் பலரும் சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்...

சினிமா கம்பெனிக்குப் பாட்டெழுதிக் கொடுத்தவகையில் பணம் வந்து சேரவில்லை. அதைக் கேட்க படத்தயாரிப்பாளரைத் தேடிப்போனார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது. பணத்தை வாங்காமல் இங்கிருந்து நகரக் கூடாது என்கிற உறுதியுடன் அங்கேயே நின்றார் கல்யாணசுந்தரம். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் படத்தயாரிப்பாளர்.

ஒரு தாளை எடுத்து அதில் சில வரிகள் எழுதி, அந்தத் தயாரிப்பாளரின் மேஜைமீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் கல்யாணசுந்தரம். என்ன ஆச்சர்யம்... படக்கம்பெனியைச் சேர்ந்த ஓர் ஆள் அலறியடித்துக்கொண்டு அடுத்த சில மணி நேரங்களில் 


கல்யாணசுந்தரத்திடம் ஓடிவந்து பணத்தைக் கொடுத்தார். 

‘தாயால் வளர்ந்தேன்; 

தமிழால் அறிவு பெற்றேன்; 

நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; 

நீ யார் என்னை நில் என்று சொல்ல?’

இதுதான் அந்தத் தாளில் கல்யாணசுந்தரம் எழுதியிருந்த வரிகள்!

பாட்டுக்கோட்டை, மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டையார் என்றெல்லாம் தமிழகத்தில் பலருடைய மனங்களிலும் தமிழக வரலாற்றிலும் பதிந்துகிடக்கிறான் இந்தப் புரட்சிக் கவிஞன்!

நன்றி- மலைச்சாமி சின்னா

Wednesday, October 7, 2020

ഒരു സുഹൃത്തിന്റെ (സാബു) സ്നേഹം, ഒരു ഇടവകയുടെയും (ആനയറ, പേട്ട) ...




 

എന്റെ ശുശ്രൂഷ പൗരോഹിത്യം - തുടർച്ച...

 [06/10, 12:55] Panky: പൂത്തുറയിലെ പോലീസ് വെടിവയ്പ്പും,  തുടർന്നുണ്ടായ മരണവും, കൊച്ചച്ചനായ എന്നെ സഹായിക്കാൻ വന്ന കോച്ചേരിയച്ചന്റ

അറസ്റ്റും, ആളുകളുടെ നിസ്സഹായതയും രണ്ടു വർഷത്തോളമായ എനിക്ക് ഒറ്റയ്ക്ക് 

താങ്ങാവുന്നതിൽ അധികമായിരുന്നു. 


അന്നത്തെ സംസ്ഥാന പോലീസ് മേധാവി ശ്രീ എം കെ ജോസഫ് (ഫാ. വി. ജോസഫ് വഴി പരിചിതൻ) കാണാൻ വന്നപ്പോഴും രൂപതയിൽ നിന്ന് ആരും വന്നതായി ഓർക്കുന്നില്ല!


അങ്ങനെയാണ് കീഴാറൂറിലേക്ക് സ്ഥലം മാറ്റം കിട്ടി പോവുന്നത്. വിദേശ മിഷനറിമാർ ഉൾപ്പെടെ പ്രഗൽഭരായ പല വൈദീകരും സേവനം ഏറ്റു വാങ്ങാൻ കഴിഞ്ഞ ഈ സുന്ദര മിഷൻ ഇടവയ്ക്ക് ആങ്കോട്, മണ്ണൂർ, ഇടഞ്ഞി, മാരായമുട്ടം എന്നീ നാല് ഉപ ഇടവകകളും ഉണ്ടായിരുന്നു. 


ആദ്യമൊക്കെ ബസിലും സൈക്കിളിലുമൊക്കെയാ യിരുന്നു അവിടങ്ങളിലേക്കുള്ള യാത്ര. പിന്നീട് ഒരു വിദേശ ഉപഹാരിയുടെ രൂപതാവഴിയുള്ള സഹായത്തോടെ രാജദൂത്‌  ബൈക്ക് വാങ്ങി ഉപയോഗിച്ചു തുടങ്ങി. (കീഴാറൂറിലും മാരായമുട്ടത്തും കൃഷി ചെയ്തതിൽ വന്ന കടം വീട്ടാൻ പ്രസ്തുത ബൈക്ക് വിൽക്കേണ്ടിവന്നു!)


മാസത്തിൽ രണ്ട് ഞായറാഴ്ചകളിൽ മാത്രം ദിവ്യബലി ലഭിച്ചിരുന്ന ഉപ ഇടവകകളിൽ എല്ലാ ആഴ്ചയും ഓരോ ഇടദിവസങ്ങളിൽകൂടി ദിവ്യബലി ആരംഭിച്ചു, സാവകാശം അവരുമായി സമയം ചെലവഴിക്കാനും കുടുംബങ്ങൾ സന്ദർശിക്കുവാനും എളുപ്പമായി. 


പിന്നെ, മാരായമുട്ടത്തു ണ്ടായിരുന്ന, ഉപേക്ഷിക്ക പ്പെട്ട മേടയിൽ, ആദ്യം ഒരു ബാലവാടി ആരംഭിച്ചു. റോഡരികിൽ ഒരു കുരിശ്ശടിക്ക് വേണ്ടിയുള്ള  ആളുകളുടെ നിരന്തരമായ താല്പര്യം മാനിക്കേണ്ടിയും  വന്നു. 


കീഴാറൂരിൽ 'അക്ഷര' എന്നൊരു ടൈപ്പ് റൈറ്റിങ് സ്ഥാപനവും ഉണ്ടായി. ഇന്ന് മണ്ണൂരും മാരായമുട്ടവും സ്വാതന്ത്ര ഇടവകകളാണ്. (തുടരും...)

[06/10, 13:02] Panky: കീഴാറൂറിൽ സ്വസ്ഥമായി ഫലപ്രദമായി ശുശ്രൂഷ നടക്കുമ്പോഴാണ് 'ഐലൻഡ് പ്രീസ്റ്സ്' എന്ന കൂട്ടായ്മയുടെ ശുപാർശ പ്രകാരം തൂത്തൂർ-ചിന്നത്തുറ പ്രശ്നപരിഹാരത്തിനു വേണ്ടി എന്നെ ചിന്നത്തുറയിലേക്ക് അയച്ചു...

[06/10, 18:16] Panky: അവിടെ പ്രശന പരിഹാരത്തിനുള്ള ശ്രമം തുടരവേ, *ചിന്നത്തുറ* പുത്തൻതുറ തമ്മിലുള്ള ഫുഡ് ബാൾ കളിയിലുണ്ടായ വഴക്ക് മത്സ്യബന്ധനോപഹാരണങ്ങൾ പരസ്പരം കൊള്ളയിടുന്നതിലും മറ്റും എത്തി. തർക്കങ്ങൾ പറഞ്ഞു പരിഹരിക്കുന്നതിൽ താല്പര്യമില്ലാത്ത ചിലരുടെ മാന്യത വിട്ടുള്ള പ്രതികരണം അവിടെനിന്നും മാറുവാൻ പ്രേരിപ്പിച്ചു. 


അപ്പോഴാണ്

*വള്ളവിളയിലെ* വികാരി ജെറാൾഡ് സിൽവ അച്ചന്റെ അഭാവത്തിൽ താൽക്കാലികമായി അവിടേക്ക് പോകേണ്ടിവന്നത്. 


'പാപി പോകുന്നിടം പാതാളം' എന്ന കണക്കെ അവിടെ ആർ എസ് എസ് പ്രേരണയിൽ ഒരു സാമുദായിക സംഘർഷം ഉണ്ടാവുകയും *ഒരാൾ കാണാതാവുകയും* (കടലിൽ താഴ്ത്തി എന്ന ആരോപണം ഉണ്ടായിരുന്നു) തുടർന്നുള്ള *പോലീസ് വെടിവയ്പ്പിൽ* സ്ത്രീകൾ ഉൾപ്പെടെ പലർക്കും വെടിയേൽക്കുകയും ചെയ്തു. 


കാണാതായ ഗോപാലകൃഷ്ണന്റെ തിരോധാനത്തിന്റെ ഉത്തരവാദിത്തം താൽക്കാലിക വികാരിയുടെ പേരിൽ ആവുകയും (സംഭവ്യമെന്ന് പലരും ഭയപ്പെട്ട) ആർ എസ് എസ്-പോലീസ് പീഡനത്തിന്റെ പേരിൽ 

എനിക്ക് *ഒളിവിൽ പോകേണ്ടിവന്നു!* ഇതിൽനിന്നുള്ള രക്ഷപെടലായി വിദേശ പഠന നിർദ്ദേശം ഞാൻ നിരസിച്ചതുകാരണം സുരക്ഷിതമെന്നു കരുത്തപ്പെട്ട കരുങ്കുളത്ത് ഫാ. ബോസ്‌കോയുടെ കൂടെ കുറെ ദിവസം കഴിഞ്ഞു. തുടർന്ന് *കൊച്ചുതുറ* താൽക്കാലിക ചുമതലയും, പിന്നെ വികാരി സ്ഥാനവും ലഭിക്കുകയുണ്ടായി. 


കൊച്ചുതുറയിലെ ശുശ്രൂഷ പലതുകൊണ്ടും എന്റെ ജീവിതത്തെ സ്വാധീനിച്ചു. അവിടുത്തെ കൊച്ചുമക്കളുമായുള്ള സവിശേഷമായ ഇടപെടൽ, പള്ളിയുടെ നവീകരണം, പാരിഷ് ഹാൾ നിർമ്മാണം, *പള്ളിയിലെ കരിങ്കൽ അൾത്താര, ഇരിപ്പിടങ്ങൾ, വായനാ പീഠം, കറുത്ത കരിങ്കൽ കുരിശ്* എന്നിവ പ്രത്യേകതകളാണ്. 


അവിടെ നിന്നുമാണ് തിരുവനന്തപുരം യൂണിവേഴ്‌സിറ്റ് കോളേജിലെ ഫിലോസഫിയിൽ ബിരുദാനന്തര പഠനം. 


അവിടെയുള്ള സെൻറ് ആന്റണീസ് എൽ പി എസ്സിന്റെ മേനേജർ സ്ഥാനം, പ്രധാന അദ്ധ്യാപക നിയമനത്തിലെ ഹൈകോടതി കേസും തുടർന്നുണ്ടായ വിദ്യാഭ്യാസ വകുപ്പിന്റെ അയോഗ്യതയും ഏറ്റു വാങ്ങേണ്ടി വന്നു. 


വൈദീക ജീവിത പ്രണയം, പൗരോഹിത്യം ഉപേക്ഷിക്കാൻ വരെ തീരുമാനിക്കൽ, പല ഭാഗത്തുനിന്നുമുള്ള ഇടപെടൽ കാരണം അത്തിൽനിന്നുമെല്ലാം എങ്ങനെയാ രക്ഷപെടൽ...

[06/10, 21:48] Panky: ബാംഗ്ലൂർ ഇന്ത്യൻ സോഷ്യൽ ഇൻസ്റ്റിറ്റൂട്ടിൽ

ത്രൈമാസ സോഷ്യൽ അനാലിസിസ് പഠനം. 


 *വട്ടവിളയിലേക്ക്* സ്ഥലം മാറ്റം. വ്യക്തിപരമായ സംഘർഷങ്ങളാൽ നാഗർകോവിൽ  ചുങ്കാൻകട *തിരുമല ആശ്രമത്തിൽ* പ്രതിമാസ പ്രാർത്ഥനാ (ഉച്ച മുതൽ ഉച്ച വരെ) സന്ദർശനം. അതിന്റെ തുടർച്ചയായി വാഗമൺ *കുരിശുമല ആശ്രമത്തിൽ*  രൂപതാധ്യക്ഷന്റെ മാത്രം അറിവോടെ  പരീക്ഷണാ ടിസ്ഥാനത്തിൽ ചേരുന്നു. അവിടെ സംന്യാസാർത്ഥികളെ പഠിപ്പിക്കാനും ആചാര്യയുടെ ഭാരതീയ പുന്യാത്മാക്കളെക്കൂടി ഉൾപ്പെടുത്തി തയ്യാറാക്കുന്ന അനുദിന വിശുദ്ധരുടെ പുസ്തക രചന മുതലായവയിലും സഹായിക്കാനും ഇടയായി.  


ഏതാണ്ട് നാലഞ്ചു മാസങ്ങൾക്കു ശേഷം മാതാപിതാക്കളും സഹോദരിയും മകളും കുറെ വൈദീക സുഹൃത്തുക്കളും വൈദീക വിദ്യാർത്ഥിയും ഒരു സമർപ്പിത സഹോദരിയും ഉൾപ്പെട്ട സംഘം അപ്രതീക്ഷിതമായി അവിടെ വരികയും ചെയ്തപ്പോൾ അവർക്കൊപ്പം പോയിട്ട് വരാൻ ആചാര്യ ഫ്രാൻസിസ് അനുവദിച്ചതിന്റെ പേരിൽ വീട്ടിലേക്ക് വന്നു. 


രൂപതാധ്യക്ഷനെ കാണാൻ ചെന്നപ്പോൾ അദ്ദേഹം ഒരു സഹായം അഭ്യർത്ഥിച്ചു, 

*തൂത്തൂരിൽ*, നാട്ടുകാർ 

പൂട്ടിയെടുത്ത പള്ളിയും മേടയും തുറക്കാൻ പലർക്കും സാധിക്കാത്ത സാഹചര്യത്തിൽ ഒന്നുകൂടി ശ്രമിക്കാൻ എന്നോട് ആവശ്യപ്പെട്ടതിന്റെ പേരിൽ അവിടെ പോയി. 


അവിടെ ചെന്ന് കാര്യം അറിയിച്ചിട്ട്, മേട തുറക്കാത്തതിനാൽ തൊട്ടടുത്തുള്ള എന്റെ നാട്ടിലേക്ക് പോയി. അധികം വൈകാതെ മേടയും പള്ളിയും തുറക്കുവാനും തിരുക്കർമ്മങ്ങൾ നിറവേറ്റാനും കഴിഞ്ഞു. 

അങ്ങനെ, താൽക്കാലികമായി അയച്ച എന്നെ സ്ഥിരമാക്കി നിയമിച്ചു.

എന്റെ ശുശ്രൂഷ പൗരോഹിത്യം...

 പൂത്തറയും മത്സ്യത്തൊഴിലാളിമുന്നേറ്റ സമരങ്ങളും...

(ഒരു ശുശ്രൂഷ പൌരോഹിത്യം പിച്ചവയ്ക്കുന്നു...)

എന്‍റെ ശുശ്രൂഷാ (പൌരോഹിത്യ) ജീവിതം ആരംഭിക്കുന്നത് അഞ്ചുതെങ്ങ് മേഖലയില്‍ നിന്നുമാണ്, ആയിരത്തി തൊള്ളായിരത്തി എണ്‍പത് ഡിസംബര്‍ അവസാനം, കൃത്യമായി ക്രിസ്മസ്സോടെ, അന്ന് അഞ്ചുതെങ്ങിലെ വികാരി, തോമസ്‌ പെരേരാ അച്ചന്‍റെ സഹായിയായിട്ടാണ്. തുടര്‍ന്ന്, താഴംപള്ളി -അരയതുരുത്തി ഇടവകകളുടെ താല്‍ക്കാലിക ചുമതലക്കാരനായി അഞ്ചുതെങ്ങില്‍ താമസം. പിന്നെ അടുത്ത വര്‍ഷം ഫെബ്രുവരി പതിനാറിന് പൂത്തുറ ഇടവക ശുശ്രൂഷ (വികാരിയായി) ചുമതലയേറ്റു (കോച്ചേരി അച്ഛനും സംഘത്തിനും ശേഷം ഒരു വര്‍ഷത്തിനിടയ്ക്ക് രണ്ടു വികാരിമാര്‍ സ്ഥലം മാറിപ്പോയതിന്‍റെ പിന്നാലെ..). (അഞ്ചുതെങ്ങില്‍ നിക്കോളാസ് ഡിക്കോസ്റ്റാ അച്ചനും, മാമ്പള്ളിയില്‍ സ്റ്റീഫന്‍ മേത്താശ്ശേരി അച്ചനുമായിരുന്നു).

മത്സ്യത്തൊഴിലാളി മേഖല അവകാശ സമരങ്ങളാല്‍ കൊടുമ്പിരികൊണ്ടിരിക്കുന്ന കാലം. ആറ്റിങ്ങലില്‍ ഉപതെരെഞ്ഞെടുപ്പ് വേറെ നടക്കാനിരിക്കുന്നു. ഏതോ ഒരു നിസ്സാര കാര്യത്തിന് അഞ്ചുതെങ്ങ് – പൂത്തുറക്കിടെ ഒരു വഴക്ക്, സംഘര്‍ഷാവസ്ഥ. അത് ആയിരത്തി തൊള്ളായിരത്തി എണ്‍പത്തിരണ്ട് മേയ് മാസം ഒന്നാം തിയതി, തൊഴിലാളി ദിനമായിരുന്നു. പോലീസ് സേന തമ്പടിച്ചു കഴിഞ്ഞിരുന്നു. പലതരത്തിലും പ്രബലരായ അഞ്ചുതെങ്ങുകാര്‍, അടുത്ത ദിവസം (രണ്ടാം തിയതി) പൂത്തുറയിലേക്ക് അതിക്രമിച്ചു കടക്കുന്നു. ചെറുത്തുനിന്നവരെ മര്‍ദ്ദിച്ചു മുന്നേറുന്നു, ജനം പിന്‍വാങ്ങുന്നു. മുന്‍ നിരയിലെത്തിയ ഞാന്‍ വൃത്തനായ ഒരാളെ അടികൊള്ളാതെ സംരക്ഷിച്ച് പുറകെയുണ്ട്‌. ഞങ്ങള്‍ ഏതാണ്ട് പള്ളിപ്പരസത്തെത്തുമ്പോള്‍ പോലീസും പുറകെയുണ്ട്‌. അപ്രദീക്ഷിതമായാണ് പൊടുന്നനെ വെടിയൊച്ച കേട്ട് ഞങ്ങള്‍ സ്ഥപ്തരായി തിരിഞ്ഞു നോക്കുമ്പോള്‍ പോലീസ് തോക്കുമായി ഉന്നംവച്ചു നില്‍ക്കുന്നു. എന്റെ മുന്‍പില്‍ ഗില്‍ബര്‍ട്ട് മാത്രം, ഉയര്‍ത്തിയ കൈകളില്‍ ഒരു തുഴവയുമായി, നിസ്സഹായനായി അടിയറ പറഞ്ഞു നിന്ന ഗില്‍ബര്‍ട്ടിനെ ഉന്നംവച്ച് വെടിയുതിര്‍ക്കുന്നു, ചോര ചീറ്റി ഉയര്‍ന്നു പൊങ്ങി നിലംപതിക്കുന്നു ഗില്‍ബര്‍ട്ട്. പോലീസ്‌ സേനയ്ക്ക് നേതൃത്വം നല്‍കിയത് അബ്ദുള്‍ അസ്സിസ് എന്ന ഒരു സര്‍ക്കിള്‍ ഇന്‍സ്പെക്ടറാണ്, അകാലത്തില്‍ പൊലീസ് ക്രൂരതയ്ക്കുമുന്നില്‍ പിടഞ്ഞുവീണത് ഒരു പാവം ചെറുപ്പക്കാരന്‍ മത്സ്യത്തൊഴിലാളി ഗ്രഹനാഥന്‍, ഗില്‍ബര്‍ട്ട്. പൌരോഹിത്യത്തിലെ ബാലനായ ഞാന്‍ വാവിട്ട് കരയുന്നു... പോലീസ് രംഗം കൈയ്യടക്കുന്നു... നിസ്സഹായരായ സ്ത്രീകളും കുട്ടികളുംമറ്റും നിലവിളിച്ചുകൊണ്ട് നിരാശരായി പിന്‍വാങ്ങുന്നു... [പൂത്തുറ വെടിവയ്പ്പ് അന്വേഷിക്കാന്‍ സര്‍ക്കാര്‍ ഒരു അന്വേഷണക്കമ്മിഷനെ നിയോഗിക്കുകയുണ്ടായി. ആസ്ഥാനം ആറ്റിങ്ങലിലും. എന്നെയും ഒരിക്കല്‍ വിളിച്ചിരുന്നു. ഞാനും ഹാജരായി... യശ്ശരീരനായ ഗില്‍ബര്‍ട്ടിന്റെ വിധവയ്ക്ക് ഒരു ലാസ്റ്റ് ഗ്രേഡ് ജോലി ലഭിച്ചു എന്നല്ലാതെ മറ്റെന്തുണ്ടായി!]

സഭാ നേതൃത്വത്തെ സര്‍ക്കാര്‍ സംവിധാനങ്ങളെ വിവരം അറിയിക്കാന്‍, സാധ്യമായ സഹായം തേടാന്‍, സ്ഥിരം കടത്തുപോലുമില്ലാത്ത അന്ന് ഒരുവിധം അക്കരയെത്തുന്നു ഞാന്‍. കൂടെ പീറ്ററുമുണ്ട്... ആറ്റിങ്ങലിലെത്തി ഫോണ്‍ ചെയ്യുന്നു. ആപോഴാണ് പീറ്റര്‍ കോച്ചേരിയച്ചന്റെ കാര്യം പറഞ്ഞതും, ഞാന്‍ അദ്ദേഹത്തെയും വിവരം അറിയിച്ചതും. വൈകുന്നേരത്തോടെ അദ്ദേഹം അഞ്ചുതെങ്ങില്‍ എത്തിയെന്നും പോലീസ് അദ്ദേഹത്തെ അറസ്റ്റ് ചെയ്തുവെന്നുമാണ് തുടര്‍ന്ന് കേട്ടത്! ഞാന്‍ വിളിച്ചിട്ടാണെന്ന കുറ്റബോധത്തില്‍ അന്വേഷിച്ചപ്പോള്‍ അറിഞ്ഞത്, അത് കരുതിക്കൂട്ടിയുള്ള നീക്കമായിരുന്നു എന്ന്‍. കാരണം ഒരു ഇടതുപക്ഷ അനുഭാവിയാണെന്ന് അറിയപ്പെട്ടിരുന്ന അദ്ദേഹത്തിന്‍റെ സാന്നിദ്ധ്യവും സാധ്യമെന്ന് അവര്‍ കരുതിയിട്ടുള്ള ഇടപെടലുകളും കോണ്ഗ്രസ് സ്ഥാനാര്‍ഥി വക്കം പുരുഷോത്തമനു ദോഷമാവുമെന്നു കരുതി ചെയ്തതാണെന്ന്.

ലോക്കപ് പീഡനം – ശാരീരിക, മാനസീക – നമുണ്ടായതായി പിന്നീട് കാണാന്‍ ചെന്ന എന്നോടും മേത്താശ്ശേരി അച്ചനോടും അദ്ദേഹം പറയുകയുണ്ടായി. തുടര്‍ന്ന് മത്സ്യത്തൊഴിലാളി സമരങ്ങളും, വെടിവയ്പ്പിനെതിരെയുള്ള പ്രതിഷേദങ്ങളും പ്രക്ഷോപങ്ങളും അദ്ദേഹത്തിന്‍റെ മോചനത്തിനുവേണ്ടിയുള്ള പോരാട്ടമായി. അങ്ങനെ കോച്ചേരിയച്ചന് അപ്പോള്‍ മുതല്‍ വാര്‍ത്തകളില്‍ ഇടം പിടിക്കുകയും മാധ്യമശ്രദ്ധ പിടിച്ചുപറ്റി മത്സ്യത്തൊഴിലാളി സംഘടനാ, സമരമുഖങ്ങളില്‍ നേത്രുത്വ നിരയിലേക്കു സാധാരണയിലും നേരത്തെ എത്തിപ്പെടുകയും ചെയ്തതു ചരിത്രമാണ്.

തോമസ്‌ കോച്ചേരി, മാത്യൂ ഊട്ടുക്കുന്നേല്‍, ജെയിംസ് ചക്കാലക്കല്‍ എന്നീ രക്ഷകസഭാംഗങ്ങള്‍ (Redemptorists) അന്നത്തെ രൂപതാധ്യക്ഷന്‍ ക്രാന്തദര്‍ശിയുമായ പെരേര മെത്രാനാല്‍ പൂത്തുറയിലേക്ക് അയക്കപ്പെട്ടു. അങ്ങനെ കോച്ചേരിയച്ചനും കൂട്ടരും അവിടെ എന്‍റെ മുന്‍ഗാമികളായിരുന്നു. പൂത്തുറയുടെ പ്രത്യേകതകള്‍ കണക്കിലെടുത്തുകൊണ്ട് അവരെ, നിലവിലെ സാമൂഹിക വ്യവസ്ഥകളില്‍നിന്നും മറ്റും മോചിതരാക്കാന്‍, ‘വളം വയ്ക്കേണ്ടത് കതിരിലല്ല ചുവട്ടിലാണ്’ എന്നതിന്‍ പ്രകാരം കുഞ്ഞുമക്കള്‍ക്കായി ഒരു ബാലവാടി തുടങ്ങിയിരുന്നു. ഒപ്പം ബാല്യം കഴിഞ്ഞവര്‍ക്ക് വായിച്ചു വളരാന്‍ ഒരു വായനശാലയും, മത്സ്യത്തൊഴിലാളികള്‍ക്ക്, വിശിഷ്യാ സാമ്പത്തിക പരാദീനതയുടെ പേരില്‍ കമ്പവല പോലത്തെ മത്സ്യബന്ധന ഉപാദികളില്‍ അടിമകളെപ്പോലെ അകപ്പെട്ടുപോയവരെ മോചിപ്പിക്കാനും അത്തരക്കാരുടെ സ്വന്തം കാലില്‍ നില്‍ക്കാനുള്ള കൂട്ടായ്മയ്ക്ക് തനതായ മത്സ്യബന്ധന ഉപാതി (സഹകരണ കമ്പവല) സംഘടിപ്പിക്കാനും ചെറു സംഘങ്ങള്‍ രൂപീകരിച്ച് ബാങ്ക് വായ്പ്പ ഏര്‍പ്പെടുത്തിയതുവരെ അവര്‍ അവിടെ ചെയ്ത് മാതൃകയായി.

അവിടുത്തെ ബാലവാടിയിലെ മിടുക്കന്മാരും മിടുക്കികളുമായ കുട്ടികള്‍ അന്നുതന്നെ കഥാപ്രസംഗം പോലുള്ള കലാരൂപങ്ങള്‍ അവതരിപ്പിക്കാന്‍ പ്രാപ്തിയുള്ളവരായിരുന്നു. ഉദാഹരണം കോച്ചേരിയച്ചന്‍ രചിച്ച് ജോളിതോമസ് എന്ന ബാലിക അവതരിപ്പിച്ച ‘കൊമ്പന്‍ സ്രാവ്’ പ്രസ്സിദ്ധമാണ്.

പൂത്തുറയ്ക്ക്, മറ്റു സ്ഥലങ്ങള്‍ക്കെന്നപോലെ, ഒരുപാട് മാറ്റമുണ്ടായി. തീരം കാര്‍ന്നുതിന്നുന്ന തിരയെ പ്രതിരോധിക്കാന്‍ കടല്‍ ഭിത്തി, പുതിയ പള്ളിയും, പള്ളിമേടയും, ചിരയിന്കീഴിലേക്ക് ചെല്ലാന്‍ പാലം, കന്യാസ്ത്രി മഠം, (ഇങ്ങ്ലീഷ്‌) പള്ളിക്കൂടം, പിന്നെ മുതലപ്പൊഴിയുമായി ബന്ധപ്പെട്ടുള്ള യാത്രാ സൗകര്യം എന്നിങ്ങനെ... [കൂട്ടത്തില്‍ ആ ഗ്രാമത്തിന്‍റെ സ്വന്തം സിസ്റ്റെര്സ് (മറ്റുള്ളവരുടെതുപോലത്തെ സാധാരണ ഓല മേഞ്ഞ, മേശ കസേരകളില്ലാത്ത, അടച്ചുപൂട്ടുള്ള സൌച്യാലയം പോലുമില്ലാത്ത ഒരു വീട്ടില്‍, നാട്ടിലെ സാധാരണക്കാരായ സ്ത്രീ ജനങ്ങളുടെതുപോലത്തെ വസ്ത്രങ്ങള്‍ ഉടുത്തു കഴിഞ്ഞ മെഡിക്കല്‍ മിഷന്‍ സഹോദരിമാര്‍) പിന്‍വാങ്ങേണ്ടി വന്നത്...]

എന്‍റെ കാലത്തും അതിന് മുന്‍പും പൂത്തുറ വൈദീക-സംന്യാസ പരിശീലനം നേടുന്ന കപ്പൂച്ചിന്‍, സി എം ഐ തുടങ്ങി പലരുടെയും, പരിശീലനത്തിന്‍റെ ഭാഗമായിട്ടുണ്ട്‌. വിമോചന ദൈവശാസ്ത്രത്തിന്റെ ആമുഖം മാത്രം കേട്ട് സെമിനാരി പഠനം പൂര്‍ത്തിയാക്കി വന്ന എനിക്ക് പൂത്തുറ നല്ല ഒരു പരിശീലനക്കളരിയായിരുന്നു, മത്സ്യത്തൊഴിലാളി ചൂഷണങ്ങള്‍ക്കെതിരെ അവരെ സംഘടിപ്പിച്ച് സമരം ചെയ്ത് പല നേട്ടങ്ങളും, വിശേഷിച്ചും ജൂണ്‍, ജൂലായ്‌, ആഗസ്റ്റ് മാസങ്ങളിലെ ട്രോളിംഗ് നിരോധനം, മത്സ്യത്തൊഴിലാളികള്‍ക്കുള്ള ക്ഷേമ നിധി, അവരുടെ മക്കള്‍ക്കുള്ള വിദ്യാഭ്യാസ സഹായം തുടങ്ങി പലതും നേടുന്നതിനൊപ്പം അവരുടെ അവകാശങ്ങളെക്കുറിച്ചുള്ള അവബോധം നല്‍കുവാനും, അവരെ ഒരു സംഘടിത ശക്തിയാക്കി അവ നേടിയെടുക്കാന്‍ സമരം ചെയ്യാനും പ്രാപ്തമാക്കിയത് അവയില്‍ ചിലതുമാത്രമാണ്. അത്തരം സംഘടനകളില്‍ മുന്‍പേ പറന്ന പക്ഷിയാണ് സ്വതന്ത്ര മത്സ്യത്തൊഴിലാളി (യൂണിയന്‍) ഫെഡറേഷന്‍. അതിന്നും ആദ്യോല്‍സാഹത്തോടെ സമരമുഖങ്ങളില്‍, അതിന്‍റെ നേത്രുത്വ തലങ്ങളില്‍ നാല് പതിറ്റാണ്ടുകള്‍ക്ക് ശേഷവും ഉണ്ടെന്നുള്ളത് ചില്ലറ കാര്യമല്ല. തുടര്‍ന്നും മത്സ്യത്തൊഴിലാളി മുന്നേറ്റങ്ങളിലൂടെ പരിസ്ഥിതി സംരക്ഷണമുള്‍പ്പെടെയുള്ള മാനവമോചത്തിനായുള്ള പടയോട്ടങ്ങളില്‍ ഉണ്ടാവട്ടെ എന്നാശംഷിക്കുന്നു.

ഈ മുന്നേറ്റങ്ങളിലെല്ലാം അന്നും, തുടര്‍ന്നിന്നുവരെ, സജീവ സാന്നിധ്യമായി പങ്കെടുക്കാനാവാത്തപ്പോഴും, ഞാനും അകലെ നിന്ന് ആദ്യാവേശത്തോടെ താല്പര്യപൂര്‍വ്വം ശ്രദ്ധിക്കുകയും മനസ്സുകൊണ്ട് നന്മ നേരുകയും ചെയ്യുന്നുണ്ട്, കാരണം ഇതും ദൈവരാജ്യം ഇവിടെ യാഥാര്‍ത്ഥ്യമാക്കാനുള്ള, അനുഭവവേദ്യമാക്കാനുള്ള ശ്രമങ്ങളുടെ ഭാഗം തന്നെയെന്നുള്ള പ്രത്യാശയില്‍...

- പങ്ക്രെഷ്യസ്/03.10.2020