Wednesday, December 11, 2019

‘உயிர்கள் வாழ்வது சுவாசத்தால், கிறிஸ்தவர்கள் வாழ்வது விசுவாசத்தால்...’


எமது பங்கு பாதுகாவலி திருவிழா மாலை ஆராதனைக்கு மறையுரை:
St. Lucy’s, Erayumanthurai
Patroness’ Feast
Vespers – Homily –Thursday, 12th December 2019 at 6.00 pm
Gen 22:7-14; James 1:2-7; Mt 17:14-21
‘உயிர்கள் வாழ்வது சுவாசத்தால், கிறிஸ்தவர்கள் வாழ்வது விசுவாசத்தால்...’
முன்னுரை:
நாம் வாழும் பகுதி, மொழி-கலாச்சார அடிப்படையில், விசித்திரமான, வித்தியாசமான ஒன்று! மொழி அடிப்படையில் நாம் என்றுமே தமிழர்கள், பக்கத்து மலையாள தாக்கம் பாதித்த தமிழர்கள். வரலாறு நம்மை மலையாளம் பேசும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாகமாக்கியது. அப்படியிருக்க, நாம் முதலில் கொச்சி மறைமாவட்டத்திலும், தொடர்ந்து திருவனத்தபுரம் மறைமாவட்டத்தினுடனும் சேர்க்கப்பட்டோம். பிறகு மொழிவழியாக மாநிலங்கள் பிரக்கப்பட்டபோது நாளடைவில் தமிழ் நாடாகிய மெட்ராஸ் மாநிலத்துடன் சேர்க்கப்பட்டோம்.

நமது ஊரில் எனக்குமுன் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் பயின்றது மலையாளத்திலும், என்னுடன் அந்த பள்ளியில் தமிழ் வழியும் ஆரம்பமானது. நமது முந்திய அடையாளம் கிறிஸ்தவமாயிருக்க அதன் திருவனத்தபுரம் மறைமாவட்டவழிபாட்டு மொழி மலையாளமாகவும் தொடர்ந்தது. மேலும் நம் ஊர்களில் பணிக்காக வந்த பங்கு தந்தையர்களும் மலையாளிகளே, அல்லது தமிழ் பரிமாற்றம் செய்யத் தெரியாத ‘தமிழ்நாட்டுக்காரர்’களே! கேரளா தலைநகர் நமக்கு பக்கமென்பதாலும், நமது மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கேரளாவுக்கும், அதை தாண்டி மேற்கு கடற்கரைக்கும் செல்வதாலும் மலையாள மொழி-கலாச்சார ஈடுபாடுகள் அனிச்சையாக நம்மை தொற்றிக்கொண்டது.

என்னுடைய நிலையும் பரிதாபத்திற்குரியதே! பதினொன்றுவரை தமிழ் பயின்று, தமிழிலும் பயின்று, பிறகு குருமாணவனாக திருவனந்தபுரம் சென்று அன்றிலிருந்து இன்றுவரை மலையாளிகளோடு படித்து, பழகி, பணிசெய்து வாழ்ந்து வரும் என்னை தமிழ் மறையுரையாற்ற கூப்பிட்டால், அது பரிதாபம் என்றல்லாமல் வேறு என்ன சொல்வது!

நமது ஊர் மொழிவழக்கு பரவாயில்லை, ஆனால் சரியாக, சரமாரியாக சுத்த தமிழில் பேசும் திறமை இல்லை என்றே நினைக்கிறேன். பொறுத்துக்கொள்வீர்கள் எனில் முயற்சிக்கிறேன்.  

-           முதல் வாசகம்: ஈசாக்கை பலியிடுதல்...
o    நரபலி – கடவுள் கேட்டுக்கொண்டார் என்றால், அது ஒருவகை கட்டளை, நடைமுறை...
o    ‘அவன்மேல் கைவைக்காதே’ என்றால், நரபலி வேண்டாம், மிருகபலி போதும் என்றே பொருள்... அதுவும் அபிரகாமினுடைய விசுவாசத்திற்கு கைமாறாக! இன்று மிருகபலிகூட தடைசெய்யப்பட்டுவிட்டது...
o    தனது ஒரே பேறான மகனை பலிகொடுக்க, கடவுள் கற்றது ஆபிரகாமிடமிருந்தாகலாம்!
o    தெரியாத, தெளிவில்லாத ஒன்றை விசுவாசிக்கிறோம் என்றால், அடிப்படையில் அது நம்மை நாமே விசுவாசிக்கிறோம் என்றுதானே பொருள்படும்?
-           இரண்டாம் வாசகம்: ‘நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றி கேட்கவேண்டும்...’
o    நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்... எத்துணை உண்மை!
-           நற்செய்தி: பேய் பிடித்த சிறுவனை குணமாக்குதல்:
o    ‘நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?
§   அதாவது, நீங்களாகவே செய்யவேண்டியதுதானே? ஆனால், அதற்கு தேவை  நம்பிக்கை, அதாவது தன்னம்பிக்கை.
o    ‘உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் உங்களால் பேயை ஓட்ட இயலாமல் போனது...
§   ஆம், யானைக்கு பலம் தும்பிக்கையில் என்பதேபோல் நமக்கு அது நம்பிக்கையில்’
§   ‘உன்னால் முடியும் தம்பி’... ‘வானமே எல்லை!’
§   ‘முடியாது’ என்ற சொல்லை அகராதியிலிருந்து எடுத்துவிடுங்கள்’ பேரரசர் அலக்சாண்டர்
சுவாசம் – விசுவாசம்: (வேகம் – விவேகம்)
-           இந்த விசுவாசம் என்பது தன்னம்பிக்கையே...
o    அதுவே இன்றளவும் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிக்கும், காலத்தையும் இடத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, நமது அனைத்து நாகரிக, கலை, கலாச்சார, இலக்கிய, அறிவியல் வளர்சிகள் பெற மனிதனுக்கு துணை நின்றது...
o    இயற்கையை, அதன் சீற்றத்தை, காட்டு மிருகங்களை  கட்டுப்படுத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்குமுன் இந்த நம்பிக்கையே அவனுக்கு துணையாயிருந்தது...
-           எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, அனைத்தையும் அறியும் கடவுளை நம்புவதால் இலாபமின்றி நஷ்டமில்லாதிருக்கும்போது, நம்பிக்கை சுலபம்...
-           ஆனால், இயேசுவில் மனிதனான அந்த இறைவனே இன்றைய நற்செய்தியில் அவனையே, அவர்களையே நம்ப கேட்கிறான்...
-           மேலும், பிறரில் அவனைக் காண கேட்கிறான்...
o    நான் பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன்... இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் இதை செய்தபோது எனக்கே செய்தீர்கள்’
o    ‘கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தூர்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்...’
o    ‘சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?... நீர் யார்?... நீ துன்புறுத்தும் இயேசு நானே...’
கிறிஸ்தவர்கள்:
-           இயேசுகிறிஸ்து
o    ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்... (கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை)..
o    திருமுழுக்கு: ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்...
o    சீமோன் பேதுரு: ‘நீர் மேசியா, வாழும் கடவுளின் மகன்... தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம்...
o    தலைமைக் குரு: ‘நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?’
o    ‘நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்... அன்றைய, இன்றையும், என்றையுமான போதனை...
ஆக, விசுவாசம், நம்மை நாமே நம்புவதுதான், கூடவே பிறரையும் நம்புவது; மனிதனை, மனிதத்தை நம்புவது... மனிதமே தெய்வீகம், தெய்வம்...

கடைசியாக, நமது ஊரைப் பற்றி ஒருசில கவலைகள் பங்குவைக்கலாம் என நினைக்கிறேன். அதையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். நமது இந்த சின்ன கிராமம் பக்கத்து ஊர் நெரிசல்களை விட்டால் அமைதியான, அழகான ஓன்று; படிப்பிற்கும், விளையாட்டிற்கும் சளைக்காதவர்கள். இந்த அமைதி கிராமம் நாளடைவில் ஒருசில சுயநலக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்று நினைக்கிறேன். அதனால் அமைதி இழந்து, கடலரிப்பு மற்றும் இப்போதைய துறைமுக கட்டமைப்புக்களால் அதன் களையிழந்து காணப்படுகிறது.

இதை நமதருமை அழகு, அன்பு கிராமமாக்க நமது பிரிவினைகளை களைவோம், லூசியம்மாவின் அருமை செல்வங்களாக ஒன்றுபடுவோம், நமது தனிமனித, குடும்ப போட்டி பொறாமைகளை பங்கு பணிகளில், விசுவாச வாழ்க்கையில் திணிக்காமலிருப்போம். அதற்கு தலைமை தாங்கும் பங்கு பணியாளருடன் ஒத்துழைப்போம், இயேசுவின் இறையரசுக் கனவை இங்கு நனவாக்குவோம். நன்றி.

No comments: