Tuesday, February 11, 2025

சிலை வழிபாடு...

இதுவரை நான் செய்யாத ஒரு காரியம் நண்பர் ஒருவருக்காக செய்திருக்கிறேன், அதாவது 47 நிமிட ஒளிப்பேழையை, அதுவும் மதம் சார்ந்த, வேதாகமம் சார்ந்த ஒன்றை பார்க்க. தொடர்ந்து, எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன்: முதலில் வேதாகமம் பற்றிய ஒரு அடிப்படை தகவல் - எந்த அளவுக்கு வேதாகமம் 'கடவுளின்' வார்த்தையோ அந்த அளவுக்கு அது மனிதனின் வார்த்தைகூட... (As much Bible is the word of God, that much it is word of man also'. கடவுளை யாரும் கண்டதில்லை, (கண்டவர் யாரும் சொன்னதுமில்லை)! கடவுள் மனிதனின் கற்பனை என்றும், அவனது படைப்பு என்றும் சொல்பவர்கள் உண்டு. மலையாளக் கவிஞர் குஞ்சுண்ணி சொல்வது கவனிக்கப்படவேண்டிய ஒன்று: ஆறாம் நாள் கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தான். ஏழாம் நாள் மனிதன் கடவுளை கல்லிலிருந்தும்... (ആറാം ദിവസം മണ്ണാൽ സൃഷ്ടിച്ചു മർത്യനെ ദൈവം/ ഏഴാം ദിവസം കല്ലാൽ ദൈവത്തെയും തഥാ...). மேற்குறிப்பிட்ட ஒழிப்பேழை பேச்சில் அவர் பயன்படுத்தும் வெளிப்பாடு ஆகமம், வித்யாசமான இலக்கிய, கற்பனை சார்ந்த நடை- கொண்டது... கடவுள் அரூபி என மதங்களே சொல்கின்றன, எனில் ஆண்-பெண் வித்யாசமேன்! அதனால்தான் என்னமோ இந்து மதம் கடவுளை 'அர்த்தநாரீஸ்வரர்' என சொல்கிறது.. மேலும், அவர் பெண்/ ஸ்த்ரீ கடவுளாக முடியாது, கூடாது என சொல்கிறார்... கடவுளே 'மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்' என்று அவரே ஏற்றுக்கொள்ளும் வேதகாமம் சொல்லுகிறதே! பெண் எந்த வகையில் ஆணை விட குறைந்தவள்? உள்ளபடி, அவளே உயர்ந்தவள், தாய்மையால்... இந்திய தத்துவ சாஸ்திரம் 'சிவம்-சக்தி' எனவும் 'பிறகிருதி-புருஷன்' எனவும் பிரபஞ்சத்தை புரிந்து வைத்திருக்கிறது. எனவேதான் சிவன் தன் சரிபாதியாக சக்தியை ஏற்றுக்கொண்டு அர்த்தனாரீஸ்வரனாக தோன்றுகின்றான். இதையே அந்த போதகர் மறுக்கிறார். மேலும், அத்வைத சித்தாந்தம் 'பரம்பொருள்' இரண்டல்ல என சாற்றுகிறது. எனில், அது மூன்றும் (திருத்துவம்) அல்ல. பிறகு, சிலை வழிபாட்டை எடுத்துக்கொண்டால், கடவுளை மனு உருவில் சித்தரிப்பது எங்ஙனம் சிலை வழிபாடல்ல என்று சொல்ல முடியும்! உருவமில்லாத ஒன்றுக்கு உருவம் கொடுப்பதே சிலை வழிபாடு தான். அந்த பரம்பொருளை எந்த படைப்புமாக ஒப்புவித்தாலும், அது பணமோ, பதவியோ, அதிகாரமோ எதுவானாலும் அவையும் சிலை வழிபாடே. மனிதனும் ஒரு படைப்பே. மனிதனுக்கு சில நேரங்களில் சிலைகள் தேவைப்படுகின்றன, சில உண்மைகளை, நிஜங்களை, வாழ்க்கை மதிப்பீடுகளை நினைவூட்ட, ஞாபகப்படுத்த... படங்கள், புகைப்படங்கள், சித்திரங்கள், ஞாபக சின்னங்கள், பொருட்கள் என்பன - அவையும் சிலைகளாக கருதப்படலாம்... மேலும் சொன்னால் கடவுள், ஆன்மிகம் என்பன விவாத விஷயம் அல்ல, அது அனுபவிக்க வேண்டியது... மதம் ஒரு அமைப்பு, கட்டமைப்பு - சடங்கு, சாம்பிரதாயம், சட்டம் என மனிதன் தன் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப உண்டாக்கியவை... நன்றி. [FB 12.02.2022]

பங்கிக'கவிதை'கள்... என்னுரை:

பங்கிக்'கவிதை'கள்... என்னுரை: மலையாள திருவி தாங்கூறிலிருந்து 1956-ல் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தோடு (இன்றைய தமிழ்நாடு) மொழிவழியாக இணைக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நான் பயின்ற பூத்துறை அரசு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ் வழி தொடங்கியது நான் ஒன்றாவது வகுப்பில் சேர்ந்த வருடம், 1960. என் தமிழ் மொழிப் பற்று திராவிட இயக்கத்தோடு, அதன் சுய மரியாதை, பகுத்தறிவு பண்புகளோடு இணைந்தது. என் தமிழ் ஆசிரியர்கள் திருவாளர்கள் செண்பகலிங்கம், மயிலேறும்பெருமாள் மற்றும் சேவியர் அவர்களும் என் தமிழ்ப்பற்றுக்கு ஊக்கம் தந்தவர்களில் முக்கியமானவர்கள். பள்ளியில் பயின்ற செய்யுள் தவிர கவிதை, குறிப்பாக புதுக்கவிதை திரையிசை பாடல்கள் வாயிலாக வந்தது. மேலும் அழகியலோடு சேர்ந்து பகுத்தறிவும் தந்த எங்கள் எழில்துறை, இரையுமன்துறை கிராமம் எனது எழுத்துக்கும் எண்ணங்களுக்கும் வண்ணம் சேர்த்தது... புதுக்கவிதைக்கு மரபுக்கவிதையின் இலக்கண வரையறைகள் அத்துணை அவசியமில்லை என்ற ஒரு கருத்து இருக்க, நானும் எழுத தொடங்கினேன், என்றிலிருந்து என்று ஞாபகமில்லை... ஆனால், 1977 முதல் எனது ஓரிரு 'கவிதை'கள் 'கடவுளின் பிரதிநிதி' போன்ற ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அன்றிலிருந்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஏனோ, இப்போது அவற்றை பிரசுரிக்கலாம் என்ற ஒரு எண்ணம் எழ அண்ணன் அருள்சாமியிடமும் தம்பி சாகரிடமும் வாசிக்க கொடுத்தபோது சாகர் பிரசுரிக்க ஊக்கமும் ஒத்தாசையும் தந்துகொண்டேயிருந்தான். அவர்கள் இருவருக்கும், குறிப்பாக சாகருக்கு நன்றி. இவற்றை வாசித்து அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் குமரி ஆதவன் மற்றும் முனைவர் ஆன்சிமோள் ஆகியோருக்கும் வாழ்த்துரை வழங்கிய ஆசிரியர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்களுக்கும், நூலை வடிவமைத்த ஜெ. இ. பதிப்பகத்துக்கும், அச்சேற்றிய சென்னை ரியல் இம்பேக்ட் சொல்யூஷன்ஸ் அச்சகத்துக்கும், வெளியிட்ட கடற்கரை பதிப்பகத்துக்கும் நன்றி. வாசகர் இல்லையென்றால் எழுத்தும் எழுத்தாளனும் ஒருவகை கனவுலகிலேயே இருந்தாகவேண்டும். அப்படியல்லாமல், இதை ஏற்று, வாசித்து உங்கள் எண்ணங்களை எழுதுக... pankyarul2020@gmail.com இந்த, எனது முதல் நூல் எமது பாமரத்தாய் லேனம்மா மற்றும் 'பாகவதர'ப்பா அருளப்பன், 'அம்மையப்பனு' க்கு சமர்ப்பணம்... - அன்புடன் பங்கிராஸ் [

അരുളപ്പൻ ഭാഗവതർ സ്മാരക പുരസ്കാരം . ..

അരുളപ്പൻ ഭാഗവതർ ഇന്നത്തെ പുരസ്‌കാരം സംഭാവന ചെയ്ത ശ്രി ജോൺ റോസിന്റെ (റിട്ടയേർഡ് അസിസ്റ്റന്റ് പോലീസ് കമ്മീഷണർ, നോർത്ത് ചെന്നൈ) പ്രിയ പിതാവാണ്. ഇദ്ദേഹം ഇരയുമൻതുറയിലെ വസ്ത്യാൻപിള്ള - അന്തോനിയാപ്പിള്ള ദമ്പതികളുടെ മകനാണ്. ചെറുപ്പത്തിലേ സംഗീതത്തോട് അഭിനിവേഷം പുലർത്തിയ ഇദ്ദേഹം ഇന്നത്തെപ്പോലെ ബസ് സൗകര്യങ്ങളില്ലാത്ത ആ കാലത്ത് സൈക്കിൾ ചവിട്ടി പത്ത് പതിനഞ്ച് മൈൽ അകലെയുള്ള ഇരണിയലിൽ ചെന്ന് മുത്തയ്യാ ഭാഗവതരിന്റെ ശിക്ഷണത്തിൽ സംഗീതം അഭ്യസിച്ചു. തുടർന്ന് നാട്ടിലും പരിസര പ്രദേശങ്ങളിലും ചെറിയ തോതിൽ കച്ചേരികൾ സംഘടിപ്പിച്ചതിന് പുറമെ ഗായകൻ എന്ന നിലയിൽ നാടകങ്ങളിൽ, വിശിഷ്യ ഇരണിയൽ കലൈത്തോഴൻറെ സംഘത്തിൽ ചേർന്ന് അഭിനയിച്ചിട്ടുമുണ്ട്. പിന്നീട് ബ്രിട്ടീഷ് പട്ടാളത്തിലും കുറേക്കാലം സേവനമനുഷ്ഠിച്ചിട്ടുള്ളതുമാണ്. അദ്ദേഹത്തിന്റെ സഹധർമിണി, പൊഴിയൂർ ജോറിസ്പിള്ള - ബ്രിജിത് ദമ്പതികളുടെ മകൾ, നിരക്ഷരയെങ്കിലും സുന്ദരിയും സുശീലയുമായ, ലേനമ്മയാണ്. ഈ പുരസ്കാരം ട്രാവൻകോർ മ്യൂസിക് ക്ലബ്-ന്റെ ആഭിമുഖ്യത്തിൽ 14/02/2025, വെള്ളിയാഴ്ച വൈകുന്നേരം 5 മണിക്ക് തൈക്കാട് ശ്രി ഗണേശ ഓഡിറ്റോറിയത്തിൽ പ്രസിദ്ധ സംഗീത സംവിധായകൻ ശ്രി ഓ. വി. റാഫേൽ (ഓ. വി. ആർ) -ന് ലൈഫ് ടൈം അച്ചീവ് മെന്റായി ശ്രി ജോർജ് ഓണക്കൂർ സമ്മാനിക്കുകയാണ്.[മലയാള മനോരമ വാർത്ത (11/02/2025). https://showtime.pularitv.com/News_more.php?page=arulappa-bhagwathar-memorial-award-to-ov-raphael /